Thanks to all for your full support..

பசியில்லா தமிழகம் 8883340888

உதவி செய்த அனைவருக்கும் நன்றி:தென்காசி மாவட்ட பகுதியில் HIV நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்மணி ஆதரவற்று பெற்றோர்கள் இல்லாமல், உறவினர்கள் இல்லாமல் இருந்தார்.தென்காசி அரசு மருத்துவமனையில் தாய் தந்தையர் அன்பு இல்லம் நடத்திவரும் #மும்தாஜ் அவர்கள் இந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் பராமரித்து வந்தார்.பின்பு வடகரை பகுதியைச் சார்ந்த #இஸ்மாயில் அண்ணன் அவர்கள் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்தப் பெண்ணை பெங்களூர் வரை அழைத்துச் சென்று முறையான காப்பகத்தில் சேர்த்து வைக்கப்பட்டது.தென்காசி கீழப்புலியூர் பகுதியைச் சார்ந்த நமது சகோதரி #மகேஷ் அவர்கள் திருநெல்வேலியில் இந்தப் பெண்ணை கூடவே இருந்து கவனித்துக்கொண்டார்.அனைத்து வகையிலும் உதவியாக இருந்து உடனடியாக #GENERAL_MEMO அளித்து உதவிய தென்காசி காவல்துறை ஆய்வாளர் #ஆடிவேல் ஐயா அவர்களுக்கும், காவலர் #இராமச்சந்திரன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Saturday, December 21, 2019