Adaikala Matha College

Adaikala Matha College MSW students hands with us – Pasi illa tamilaham

#உலக_மன_நல_தினத்தை( world mental health day)முன்னிட்டு நாம் மேற்கொண்ட கருணைப் பயணமானது தஞ்சாவூரில் தமது பணிகளை தொடங்கியது.#சட்டபணிகள்_ஆணைக்குழு_தலைவர், மற்றும் #செயலர்_நீதிபதி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மற்றும் தஞ்சாவூர் பகுதி சமூக ஆர்வலர்கள்,#அடைக்கலமாதா_கல்லூரி MSW படிக்கும் மாணவ, மாணவிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நமது #கருணைப்_பயணம் நிகழ்ச்சி தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் துவங்கியது. பின்னர் சாலையோரம் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தோம் அதில் ப்ரியா என்ற 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சுத்தம் செய்து கல்லூரி மாணவர்களுக்கு அவர்களை கையாளும் விதம் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.மேலும் நீதிபதி அவர்களும் களத்திற்கு வந்து நாம் செய்யும் பணிகளை பாராட்டி நம்முடன்னே இருந்து அப்பெண்ணிற்கு உரிய மருத்துவ உதவி அளித்து காப்பகத்தில் சேர்க்கும் வரை அனைவரும் எங்களுடன் இருந்து ஒத்துழைப்பு தந்தனர்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரம் இருக்க கூடாது என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு கருத்தரங்கம் ஏற்பாடு செய்த நீதிபதி அவர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

Posted by Pasi illa Tenkasi on Friday, October 11, 2019