Journey towards success…

பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் 100 நாட்கள் கருணை பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த ஒரு நபரை சுத்தம் செய்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தோம்.இதனைப் பார்த்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நம்மை தொடர்பு கொண்டு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் எனது மகன் என்று கூறினார்.சுமார் 12 வருடங்களுக்கு முன்பு வேலூரில் மனநலம் சரியில்லாத நிலையில் குடும்பத்தை விட்டு வழிதவறி சென்றுவிட்டார் என்றும்,நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நபர் எனது மகன் ஐயப்பன் என்றும் கூறினார். உடனடியாக பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர் அந்த ஐயப்பன் என்ற நபரை தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மனிதம் விதைப்போம் அறக்கட்டளையின் நண்பர்கள் உதவியுடன் தென்காசி வரவழைத்து தென்காசி காவல் துறையினர் மூலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால் வேலூர் பகுதியில் ஏபிஜே பிரண்ட்ஸ் அண்ட் பிரதர்ஸ் அறக்கட்டளை சார்பாக வேலூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் வாகனம் மூலம் தென்காசி வந்து அவர்களை அழைத்துச் சென்று வாணியம்பாடியில் சென்று சேர்க்க உள்ளார்.முதற்கட்டமாக விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888

Posted by Pasi illa Tenkasi on Wednesday, December 4, 2019