#மறுவாழ்வு_கிடைக்க_வழி_செய்யுங்கள்:பசியில்லா தமிழகத்தின் கருணை பயணத்தில் #சங்கரன்கோவில் பகுதியில் நீதிமன்ற வாசலில் ஆதரவில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற நிலையில் இருந்த நபரை மீட்டெடுத்தோம்.பல துறையைச் சார்ந்த அதிகாரிகள் தினமும் வந்து செல்லும் நீதிமன்ற வாசலில் பல வருடங்களாக ஆதரவில்லாமல் இருக்கிறார். எந்த துறையும் கண்டுகொள்ளவில்லை.நமது மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான காப்பகங்கள் போதுமான அளவு இல்லை. மேலும் இந்த நபரை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பலதுறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை படுகிறது.சரியான உணவு இல்லாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் மலம் கழித்து, மலத்தை ஒரு பாத்திரத்தில் அள்ளி வைத்துள்ளார். அருகே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.உடனடியாக காப்பகத்தில் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவரை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இதே நிலை நீடித்தால் விரைவில் மரணித்து விடுவார். நமது கருணை பயணத்தில் பங்கேற்பதற்காக கோவையிலிருந்து வருகை தந்து இரண்டு நாட்கள் தங்கி நம்முடன் இணைந்து சேவையாற்றிய #திரு_பிரபாகரன் மற்றும் #திரு_செழியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இறைவன் நாடினால் தொடர்ந்து கருணை பயணம் தமிழகம் முழுவதும் விரைவில்….*பசியில்லா தமிழகம் அறக்கட்டளை**8883340888*www.pasiillathamilaham.com
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்தென்காசி காவல்துறை ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்கள் தலைமையில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் புளியங்குடி சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழர் திருநாள் விழா சொக்கம்பட்டி அருகே மலைவாழ் மக்களுடன் கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாள் விழாவில் மலைவாழ் மக்களுக்காக நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக 40 குடும்பங்களுக்கு (T-Shirts, கைலி, துண்டு பெல்ட், பர்ஸ், நைட்டி, போர்வை சோப் மற்றும் ஷாம்பு ) அடங்கிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அனைவருக்கும் ஆடிவேல் ஐயா அவர்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது.இந்தத் தமிழர் திருநாளை மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
இரண்டு நிமிட வீடியோ உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பெறலாம். இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயம்தமிழகம் முழுவதும் மாணவர்களுடன் இணைந்து பசியில்லா தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.உங்கள் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வருவதற்கு தயாராக உள்ளோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com