#பசி_ஒரு_கொடிய_நோய்…#பணக்காரர்கள்_பசிக்க_ஓடுகிறார்கள்…#ஏழைகள்_பசிக்கு_ஓடுகிறார்கள்…பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் 80 நாளான நேற்று புதுச்சேரியில் துவங்கியது.புதுச்சேரி சபாநாயகர் #மாண்புமிகு_சிவக்கொழுந்து ஐயா அவர்கள் தலைமையில் துவங்கியது.முதல் நாளான அன்று இரண்டு நபர்களை சரி செய்து அவர்களை விழுப்புரம் அருகே உள்ள ஜுபின் பேபி அண்ணா நடத்தும் #அன்பு_ஜோதி_காப்பகத்தில் புதுச்சேரி காவல்துறை அனுமதியுடன் அனுமதித்து உள்ளோம்.மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்களை சரிசெய்து நமது வாகனத்தில் அவர்களை கொண்டு சென்றோம். விழுப்புரம் செல்லும் வழியில் நமது வாகனம் முழுவதும் ஆதரவற்ற முதியவர் மலம் கழித்து விட்டார். சாலையில் வாகனத்தை நிறுத்தி அவரை இறக்கி சுத்தம் செய்து மீண்டும் புத்தாடைகள் அணிந்து, வாகனத்தையும் சுத்தம் செய்து விழுப்புரம் சென்றடைந்து அவர்களை உரிய இடத்தில் ஒப்படைத்தோம்.#கருணை_பயணத்திற்கு_உங்களால் #முடிந்த_உதவிகளை_செய்யுமாறு #கேட்டுக்கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Monday, November 25, 2019







Views Today : 2
Views Yesterday : 5
Views This Month : 20
Views This Year : 587
Total views : 24662
Who's Online : 0




