நாமும் கொலைகாரர்கள் தான்…ஆம்…இது போன்ற நபர்களை பார்த்தும் பார்க்காமல் சென்றால் நாமும் கொலைகாரர்கள் தான்.தயவு செய்து 3 நிமிடம் இந்த வீடியோவை பார்த்து நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆதரவில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்துநிலையத்தில் சாக்கடையில் இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.தன் உடல் முழுவதும் கயிறுகளை கட்டியும் ஐந்து விரல்களிலும் மோதிரங்களை மாட்டியும் பல காலங்களாக மனநலம் பாதிக்கப்பட்வர், அந்த மோதிரம் விரலை இருக்கவே அதனை கழட்டி அப்புறப்படுத்த தெரியாமல் அப்படியே விட்டுவிட்டார்.அந்த இறுகிய மோதிரமானது அவரது விரலை காயப்படுத்தி அந்த காயம் புண்ணாகி சீழ் வடிந்து விரல்கள் துண்டாகும் நிலைக்கு அழுகிய நிலையில் காணப்பட்டது. நாம் அவரை மீட்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவரை சுத்தப்படுத்தி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த மோதிரத்தை நீக்கி கையிலே தையல் போட்டு விரல்களை ஒட்ட வைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.அவரை நிம்மதியாக மருத்துவமனையில் உறங்க வைத்து அவரது பாதுகாப்பிற்காக நமது *கருணை பயணக் குழுவினர்* மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி இருக்கிறோம்.இனி இதுபோன்று ஒரு உயிரையும் கஷ்டப்பட விடாமல், நம்மால் முடிந்தவரை காப்பாற்றுவோம்.ஆதரவற்றோருக்கு ஆதரவாய் இருப்போம்… பசியில்லா தமிழகம் உருவாக்குவோம்…பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888
Posted by Pasi illa Tenkasi on Tuesday, November 5, 2019






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




