Heartily Thankful to Facebook Friends…

#முகநூல்_நண்பர்களுக்கு_நன்றி:நமது கருணை பயணத்திலே இரண்டு நாட்களுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சுத்தம்செய்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அந்த பதிவை முகநூலில் பதிவிட்டு அதன் மூலம் மலேசியாவில் வாழும் நமது நண்பர் வந்து முகநூலை பார்த்து இதில் வரும் எனது நண்பர் என்று கூறி நம்மிடம் பேசினார். நாமும் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தோம்.12 வருடங்களுக்கு முன்பு தொலைந்த தனது மகனை காண உடனடியாக சேலம் வந்து தொலைந்த மகனை கட்டித்தழுவி முத்தமிட்டு கண்ணீர் விட்டனர். அதனைப் பார்க்கும் பொழுது நமக்கும் கண்ணீர் வந்தது.பிறகு சேலம் மாநகராட்சியில் காவல்துறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மீட்கப்பட்ட நபர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.கருணை பயணம் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இன்னும் இதுபோன்ற பல நபர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செய்தியைப் பகிர்ந்து குடும்பத்தினருடன் சேர்ப்பதற்குசெய்தியைப் பகிர்ந்து குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்த முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் பசியில்லா தமிழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888

Posted by Pasi illa Tenkasi on Thursday, November 7, 2019