#புதுச்சேரியில்_கருணைப்_பயணம்சாலையோரங்களில் மிகவும் மோசமாக குளிக்காமல் பல் துலக்காமல் முடி வளர்ந்து அழுக்கான ஆடையில் இருக்கும் ஆதரவற்ற சகமனிதர்களையும், உடல்நலம் மற்றும் மனநலம் குன்றியவர்களை முடிதிருத்தி குளிக்க பல்துலக்க வைத்து,புதிய ஆடை உடுத்தி சகமனிதனாக மாற்றிய பின்;அவர்கள் விரும்பும் பட்சத்தில் உரிய மறுவாழ்வு இல்லங்களில் முறைப்படி சேர்க்கும் பணியை தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் மற்றும் புதுச்சேரி நகராட்சி என 100 நாட்களை கடந்து குறைந்த பட்சமாக 350 நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் கருணை பயணம் கடந்த 6ந் தேதி தொடங்கி தமிழகத்தில் 14 மாநகராட்சியில் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வுக்கான பணி செய்தபின் 80வது நாளாக புதுச்சேரி மாநிலத்தில் *இன்று 24.11.2019 காலை 12.30க்கு சட்டமன்ற வளாகத்தில் வைத்து *புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் #மாண்புமிகு_சிவக்கொழுந்து அவர்கள் கருணைப் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சோயா S.N.சரவணன் M.Sc., LLB., M.முகமதுஅலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து பழைய பஸ்நிலையத்தில் மிகவும் மோசமாக அருவெறுக்க தக்க நிலையில் சுற்றித் திரிந்த இருவரை மீட்டு சகமனிதனாக மாற்றினோம். சபாநாயகர் அவர்களை பொன்னாடை போட்டு புதுவாழ்கை தொடங்க வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தார். அவரை காவல்நிலையத்தில் புகார் செய்து இருவரையும் தேடி உறவினர்கள் வரும்வரை பாதுகாப்பாக வாழ விழுப்புரத்தில் உள்ள ஜூபின்பேபி அன்பு ஜோதி இல்லத்தில் சேர்த்தோம். புதுச்சேரி மாநிலத்தில் மகேஷ் தலைமையில் தொடர்ந்து 5 தினங்கள் சேவைப்பணியை தொடர உள்ளோம்.திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம்,பசியில்லா தமிழகம் அறக்கட்டளை, தென்காசி. 8883340888R-SOYA தொண்டு நிறுவனம் 9976649066
Posted by Pasi illa Tenkasi on Sunday, November 24, 2019






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




