#மீள்_பதிவு:#மன_தைரியம்_இல்லாதவர்கள் #வீடியோவை_கண்டிப்பாக_பார்க்க #வேண்டாம்.#புகை_பான்பராக்_மது #அருந்துபவர்களுக்கு #விழிப்புணர்வுக்கான_பதிவு:6 மாதங்களுக்கு முன்பு தென்காசி அருகே வடகரை பகுதியைச் சேர்ந்த #அமத்தல் என்ற 80 வயது முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பராமரிப்பதற்கு யாருமின்றி தனிமையில் வேதனைப்பட்டு வந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் #இஸ்மாயில் அவர்கள் நமது பசியில்லா தமிழகத்தை தொடர்புகொண்டு பேசினார். நமது குழுவினர்கள் விரைந்து சென்று அவரை மீட்டோம்.சென்னை அடையாறு மருத்துவமனைக்கு செல்வதற்கு திட்டமிட்டோம். ஆனால் புற்றுநோய் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. வாயிலிருந்து புழுக்கள் கொத்துக்கொத்தாக வெளிவரத் துவங்கியது.மருத்துவர்களே சிகிச்சை மேற்கொள்ள தயங்கிய நிலையில் நமது பசியில்லா தமிழகம் குழுவினர்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக அவர்கள் வாயில் இருக்கும் அனைத்து புழுக்களையும் எடுப்பதற்கு உதவியாக இருந்தோம்.இன்று மாலைக்குள் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இறைவன் நாடியதால் நம்மால் 20 நாட்களுக்கு மேல் காப்பாற்ற முடிந்தது. பிறகு இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.அவரது உடல் வடகரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உதவி செய்த R-SOYA அறக்கட்டளை சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர், திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி, மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், பொருளாதார உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Friday, November 29, 2019







Views Today : 2
Views Yesterday : 5
Views This Month : 20
Views This Year : 587
Total views : 24662
Who's Online : 0




